×

கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை

பல்லாவரம்: கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பம்மல், எல்ஐசி நகர், நீலமேகம் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (51). இவரது மனைவி சுகந்தி (எ) உமா மகேஸ்வரி (37). ஒரு மகன் உள்ளார். பிரகாசுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் சுகந்தியுடன் திருமணம் நடந்தது. அப்போது, வரதட்சணையாக நாற்பது சவரன் தங்க நகைகளை பெண் வீட்டார் வழங்கி இருந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை பிரகாஷ் வேலைக்கு செல்லாமல் மனைவியின் நகைகளை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதை மனைவி சுகந்தி கண்டித்து வந்துள்ளார். தினமும் வேலைக்கு செல்ல வேண்டியது தானே, இவ்வாறு நகைகளை விற்று செலவு செய்தால், எத்தனை நாளைக்கு தான் சாப்பிட முடியும் என்று கேட்டுள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று முன்தினமும் அதுபோல கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு பிரகாஷ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. மனைவி பெயரை கூறி அழைத்தும், அவர் வராததால் சந்தேகமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் சுகந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, சுகந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கணவருடன் தகராறில் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Pammel ,LIC Nagar ,Neelamegam Street ,
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...